காங். மாநாடு இன்று துவக்கம்

தினமலர்  தினமலர்
காங். மாநாடு இன்று துவக்கம்

புதுடில்லி: காங். கட்சியின் 84-வது 3 நாள் மாநாடு இன்று டில்லியில் கூடுகிறது. காங்.தலைவராக ராகுல் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி எதிர்கட்சிகளை வளைத்து பா.ஜ.விற்கு எதிராக மெகா கூட்டணி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங். தலைவராக ராகுல் கடந்த டிசம்பரில் பொறுப்பேற்ற பின்னர் காங். கட்சியின் 84வது மாநாடு இன்று துவங்குகிறது. மூன்றுநாள் மாநாட்டில் 4தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.

மூலக்கதை