இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டி இன்று!

PARIS TAMIL  PARIS TAMIL
இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டி இன்று!

இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் வாழ்வா? சாவா? டி20 போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.

 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி  கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது.
 
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மூன்றவது போட்டி இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் வங்காளதேச அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி. நான்காவது போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இந்நிலையில் வங்காளதேச - இலங்கை அணிகள் மோதும் ஆறாவது முத்தரப்பு டி20 போட்டி இன்று 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் விளையாடும்.
 

மூலக்கதை