நாட்டின் பருத்தி இருப்பு 441.81 லட்சம் பொதிகள்
புதுடில்லி:‘‘நடப்பு அக்., – செப்., வரையிலான பருத்தி பருவத்தில், நாட்டின் மொத்த பருத்தி இருப்பு, 441.81 லட்சம் பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது,’’ என, மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர், அஜய் டாம்டா, பார்லிமென்டில் தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:நாட்டில் தற்போது, போதுமான அளவுக்கு பருத்தி இருப்பு உள்ளது.உள்நாட்டு பருத்தி பயன்பாடு, 334 லட்சம் பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.நடப்பு, 2017 – 18 பருத்தி பருவத்தில், முந்தைய கையிருப்பு, 47.81 லட்சம் பொதி; உற்பத்தி, 377 லட்சம் பொதி; இறக்குமதி, 17 லட்சம் பொதி என, மொத்தம், 441.81 லட்சம் பருத்தி பொதிகள் இருப்பு இருக்கும்.மேலும், பருத்தி உற்பத்தி அதிகரித்து வருவதால், நடப்பு பருவத்தில், பருத்தி ஏற்றுமதி, 15 சதவீதம் ஏற்றம் கண்டு, 67 லட்சம் பொதிகள் என்றளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.