2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் -முக்கிய அறிவிப்புகள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
201819ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை 8-ஆவது முறையாக தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம். 2018-19-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

 

2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும். இந்த நிதியாண்டில், ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் ரூ.3,14,366 கோடியாக இருந்தது. இந்த ஆண்டுக்கான கடனாக ரூ.3,55, 845 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த பட்ஜெட்டின் அறிவிப்புகள் (2018-2019):

உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ172 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது ரூ1789 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் நீர்பாசனத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தாமிரபரணி-நம்பியாறு இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் ரூ.250 கோடி செலவில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நியாயவிலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நலிந்த கலைஞர்களுக்கான நிதி உதவி ரூ. 1,500ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். சர்வதேச அளவில் தமிழ் மொழி வளர்க்கப்படும் விதமாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும். இதற்கென ஆண்டு மானியமாக ரூ. 2 கோடியை அரசு வழங்கும். ஆண்டு மானியமாக ரூ. 1 கோடியை தமிழ் பண்பாடு மையம் ஒன்றும் உருவாக்கப்படும். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவிட ரூ. 10 கோடியை தமிழக அரசு அளித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ. 10,000 இல் இருந்து 25,000 ஆக உயர்த்தப்படும். மகளிர் சுகாதார திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின்களுக்கு ரூ.60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக வாங்கப்படும் பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புக்கு ரூ519 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் துவரை, உளுந்து, பச்சைப் பயறு நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வேலைதேடும் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி வழங்கப்படும். ரூ217 கோடியில் காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது. பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகிறது. சுகாதாரத் துறைக்கு ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லை, மதுரை, கோவை, கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரிகளில் 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும். உணவு மானியத்துக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. கடலூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். மாணவர்களுக்கு விலையில்லா, லேப்டாப் வழங்க ரூ.758 கோடி புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ. 70 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும். கட்டாய கல்வியை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கப்படும் வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிக்கப்படும் நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் மணலியில் ரூ.18.51 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு படை குடியிருப்புகள் அமைக்கப்படும் கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமை பூங்கா அமைக்கப்படும் ரயில்வே பணிகள் திட்டத்துக்கு ரூ.513.66 கோடி ஒதுக்கீடு தகவல் தொழிநுட்பத் துறைக்கு ரூ.158 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
கிராமங்களை வட்டார தலைமையகத்தோடு கண்ணாடி இழை வட வலையமைப்பு மூலம் இணைக்க ரூ.1230 கோடி ஒதுக்கப்படும்.
நாகை தரங்கம்பாடி, வெள்ளம்பள்ளத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1197 கோடி ஒதுக்கீடு வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 50.80 கோடியில் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படவுள்ளது.

மூலக்கதை