பேரூந்தில் தாக்குதலுக்கு உள்ளான இரு பெண்களுக்கு பரிஸ் முதல்வர் ஆதரவு!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிசில், இரு பெண்கள் பேரூந்தில் வைத்து தாக்கப்பட்டிருந்தமையை கண்டித்து, தாக்குதலுக்கு உள்ளா இரு பெண்களுக்கும் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
63 ஆம் இலக்க பேரூந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு இளம் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, திங்கட்கிழமை தெரிவிக்கும் போது, 'பரிஸ் நகரம் எப்போதும் சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்குமானது. பாதிப்புக்குள்ளான இரு பெண்களுக்கும் எனதம்து முழு ஆதரவினை தெரிவிக்கின்றேன்!' என குறிப்பிட்டார்.
அன்று, திரையரங்கம் ஒன்றில் இருந்து 63 ஆம் இலக்க பேரூந்தில் ஏறிய Clemence & Zoe ஆகிய இரு பெண்களும், 10 ஆம் வட்டாரத்தில் வைத்து பேரூந்துக்குள் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்தனர்.