மலேசியா பள்ளியில் தீ 25 பேர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மலேசியா பள்ளியில் தீ 25 பேர் பரிதாப பலி

கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள், 2 வார்டன்கள்  உள்பட 25 பேர் பலியாகியுள்ளனர். மலேசியாவிலுள்ள மலாய் தடுக் கேராமெட் என்கிற இடத்தில் உள்ள தனியார் இன்று அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள், 2 வார்டன்கள் உள்பட 25 பேர் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.



பள்ளியில் தீபிடித்து எரிந்ததும் அருகில் வசித்து வந்த நபர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீ கட்டுக்குள் கொண்டு வநதனர்.

மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் தீ விபத்து எப்படி நடந்தது என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

தீ விபத்தில் 25 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

.

மூலக்கதை