ரகுமானுக்கு வெள்ளி விழா

PARIS TAMIL  PARIS TAMIL
ரகுமானுக்கு வெள்ளி விழா

  ஏ.ஆர்.ரகுமானுக்கு வெள்ளி விழா கொண்டாட, ஆந்திர அரசு முடிவு செய்துஉள்ளது. ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திர பாபு நாயுடு முதல்வராக உள்ளார். இசைப்புயல், ஏ.ஆர்.ரகுமான் இசைத் துறையில் அடியெடுத்து வைத்து, 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை கொண்டாடும் வகையில், அவருக்கு, ஆந்திர அரசு சார்பில், காக்கிநாடாவில் வெள்ளி விழா நடத்த, அம்மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

 
வெள்ளிவிழாவில் ஏ.ஆர்.ரகுமான், மூன்று மணி நேரம் இசை கச்சேரி நடத்த உள்ளார். அவருடன் அதில் பங்கேற்கும் 50 இசை கலைஞர்களை திறன் அடிப்படையில் விழா குழுவினர் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்காக 15 அல்லது 20 தேதியிலிருந்து ஆன்லைன் மூலம் போட்டிகள் நடக்க உள்ளன. அக்., 28 அல்லது டிச., 23ல் வெள்ளி விழா நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, காக்கிநாடாவில் இரண்டு கோடி ரூபாய் செலவில் மேடை அமைக்கப்பட உள்ளது.

மூலக்கதை