‘எனக்கு நிறுவனம் தான் கோவில்’ : எல் அண்டு டி தலைவர் ஏ.எம்.நாயக் உருக்கம்

தினமலர்  தினமலர்
‘எனக்கு நிறுவனம் தான் கோவில்’ : எல் அண்டு டி தலைவர் ஏ.எம்.நாயக் உருக்கம்

மும்பை : ‘‘எனக்கு, நிறு­வ­னம் தான் கோவில்,’’ என, எல் அண்டு டி குழு­மத்­தின் செயல் தலை­வர், ஏ.எம்.நாயக் தெரி­வித்துள்­ளார்.

எல் அண்டு டி என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், லார்­சன் அண்டு டூப்ரோ நிறு­வ­னத்­தின், 72வது ஆண்டு பொதுக்­குழு கூட்­டம், மும்­பை­யில் நடை­பெற்­றது. இதில், எல் அண்டு டி குழு­மத்­தில், 53 ஆண்­டு­கள் பணி­யாற்றி, குழு­மத்­தின் செயல் தலை­வர் பொறுப்­பில் இருந்து ஓய்வு பெறும், ஏ.எம்.நாயக் பேசி­ய­தா­வது:கடந்த, 1965ல், எல் அண்டு டி குழு­மத்­தில், சாதா­ரண பயிற்­சி­யா­ள­ராக சேர்ந்த நான், 53 ஆண்­டு­களை கடந்து வந்­துள்­ளேன். அதில், 18 ஆண்­டு­கள், நிறு­வ­னத்­தின் தலைமை பொறுப்பை ஏற்­ற­தில் பெருமை கொள்­கி­றேன். அணு­சக்தி, விண்­வெளி ஆய்வு, பாது­காப்பு, ஹைட்ரோ கார்­பன் உள்­ளிட்ட பிரி­வு­களில், நாட்­டின் வளர்ச்­சிக்கு குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை, எல் அண்டு டி வழங்கி வரு­கிறது.

‘ஆகாஷ், பிரித்வி, பிரம்­மோஸ், ரோகிணி, சந்­தி­ர­யான், மங்­கள்­யான்’ உள்­ளிட்­ட­வற்­றின் வடி­வ­மைப்பு, தொழில்­நுட்­பம் மற்­றும் தயா­ரிப்­பில் பங்கு கொண்­டுள்­ளது.என் தந்தை, சுதந்­திர போராட்ட வீரர்; கிரா­மப்­புற மக்­கள் மேன்­மைக்­காக பாடு­பட்­ட­வர். அவர் தான், எனக்கு வழி­காட்டி. அவரை போல, நானும், எல் அண்டு டி மூலம், தேச முன்­னேற்­றத்­தில் பங்கு கொண்­டது மகிழ்ச்சி அளிக்­கிறது.

கடந்த, 1999 – 2017 வரை­யி­லான காலத்­தில், எல் அண்டு டி குழு­மத்­தின் வரு­வாய், 5,000 கோடி ரூபா­யில் இருந்து, 1.20 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.எனக்கு பின், செயல் தலை­வர் பொறுப்பு ஏற்க, எஸ்.என்.சுப்­ர­ம­ணி­யன் தான் தகு­தி­யா­ன­வர் என, 2014ல் தெரி­வித்­தேன். அதன்­படி, அவர், தற்­போது பொறுப்­பேற்று உள்­ளார். ஒவ்­வொ­ரு­வ­ரும், தான் பணி­யாற்­றும் நிறு­வ­னத்தை கோவி­லாக கருதி, அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் செயல்­பட்­டால், உயர்­வ­டை­ய­லாம். இவ்­வாறு அவர் பேசி­னார்.

மூலக்கதை