யாழில் யுவதியின் கையை பிடித்து இழுத்தவர்களின் கதி

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் யுவதியின் கையை பிடித்து இழுத்தவர்களின் கதி

 பெண்ணின் கையைப் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவா்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 
வேலைக்குச் சென்று இரவு 7 மணி அளவில் காங்கேசன்துறை வீமன்காமம் பகுதியில் உள்ள வீடு சென்ற 20 வயது பெண்ணை அந்தப் பகுதியைச் சோ்ந்த இருவா் கையைப் பிடித்து இழுத்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்தச் சம்பவம் தொடா்பாக அந்த பெண் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து நேற்று முன்தினம் அந்தப் பகுதியைச் சோ்ந்த 9 இளைஞா்கள் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனா்.
 
அவா்களை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 
 

மூலக்கதை