நான் தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன் - சசி தம்பி திவாகரன் 'திகுதிகு'
தஞ்சை: சசிகலாவால் பதவி சுகம் அனுபவிப்பவர்கள் அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் இருப்பதால் நான் தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன் என சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியுள்ளார். சசிகலாவின் தம்பி திவாகரன் மன்னார்குடியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு என்ற பெயரில் மிகப்பெரிய துரோகத்தையும் சூழ்ச்சியையும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்து செய்துள்ளனர்.