மகாநதியில் கதாசிரியர் வேடத்தில் பிரகாஷ்ராஜ்

தினமலர்  தினமலர்
மகாநதியில் கதாசிரியர் வேடத்தில் பிரகாஷ்ராஜ்

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவரது கணவர் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா ஒரு நிருபர் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அலுரி சக்ரபாணி என்ற ஒரு கதாசிரியர் வேடத்தில் நடிக்கிறார்.
அதாவது, சாவித்ரி லீடு ரோல்களில் நடித்து புகழ்பெற்ற படங்களான மாயா பஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் தான் கதை எழுதியுள்ளார். அதோடு, இந்த படங்களை தயாரித்த நாகிரெட்டியின் விஜயா கம்பைன்சில் இவரும் ஒரு பங்குதாரராம். அந்தவகையில், சாவித்ரியின் கேரியரில் அலுரி சக்ரபாணி கதை எழுதிய படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் அலுரி சக்ரபாணி கேரக்டருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மூலக்கதை