தங்கள் படங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத தனுஷ்-ஆர்யா

தினமலர்  தினமலர்
தங்கள் படங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத தனுஷ்ஆர்யா

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களாகவும் மாறினால் தான் இரட்டிப்பு வருமானம் பார்க்க முடியும் என இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் பலரும் தயாரிப்பாளார்களாகவும் டபுள் ரோல் பண்ணி வருகின்றனர். பெரும்பாலும் தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே தயாரித்து, அதனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரபலப்படுத்தியும் வருகின்றனர். ஆனால் தனுஷும், ஆர்யாவும் தயாரிப்பாளர்களாக தங்களது எல்லையை மலையாள சினிமாவிலும் விரித்துள்ளார்கள் என்றாலும், மலையாளத்தில் அவர்கள் தயாரிக்கும் படங்கள் பற்றி அவர்கள் பெரிய அளவில் அலட்டிக் கொள்வதில்லை என்பது கண்கூடாக தெரிகிறது..

மலையாளத்தில் பிருத்விராஜ் உள்ளிட்டோரை பங்குதாரர்களாக்கி உருவான ஆகஸ்ட் சினிமாஸ்' தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக மாறினார் நடிகர் ஆர்யா. ஆனாலும் மலையாள திரையுலகில் அந்த நிறுவனம் தயாரித்த, தயாரித்து வருகின்ற படங்களை பற்றி அவ்வளவாக பொது வெளியில் பகிர்வதில்லை.

அதேபோல தற்போது மலையாளத்தில் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை சத்தமில்லாமல் தயாரித்து வருகிறார் தனுஷ்.. இந்தப்படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு, டைட்டில் அறிவிப்பு என அடிக்கடி நிகழும் நிகழ்வுகள் எதையுமே தனுஷ். பொதுவெளியில், அவ்வளவு ஏன் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கூட பகிர்வதில்லை என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். காரணம் அவர்களுக்கே வெளிச்சம்..

மூலக்கதை