தவானின் அதிரடி! இந்தியா அணி அபார வெற்றி

PARIS TAMIL  PARIS TAMIL
தவானின் அதிரடி! இந்தியா அணி அபார வெற்றி

தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத்திடலில் இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் சுற்றுலா இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
 
போட்டியின், நாயண சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட பணித்தார்.
 
அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இலங்கை அணி சார்பில் , அதிகபட்ச ஓட்டங்களாக நிரோஷன் திக்வெல்ல 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
 
தனுஸ்க குணதிலக 35 ஒட்டங்களையும் , குசல் மென்திஸ் 36 ஓட்டங்களையும் மற்றும் ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பந்து வீச்சில் , அக்ஷர் படேல் மூன்று விக்கட்டுக்களையும் , பும்ரா , சஹால் மற்றும் ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்கள் வீதம் பெற்றுக்கொண்டனர்.
 
பதிலுக்கு 217 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 28.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சிகர் தவான் ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
 
90 பந்துகளுக்கு முகங்கொடுத்து 20 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்களாக தவான் இந்த ஒட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

மூலக்கதை