சென் நதியில் மிதந்து வந்த உடலம்! - காவல்துறையினர் மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
சென் நதியில் மிதந்து வந்த உடலம்!  காவல்துறையினர் மீட்பு!!

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, சென் நதியில் உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. படகில் சென்று காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். 
 
இன்று காலை 7 மணிக்கு இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆம் வட்டாரத்தின்  Mirabeau மேம்பாலத்துக்கு அருகே சடலம் மிதந்து வந்துள்ளது. உடனடியாக மீட்புப்படையினர் படகு மூலம் சென்று சடலத்தை மீட்டுள்ளனர். இறந்தவர் 49 வயதுடைய துனிசிய நாட்டைச் சேர்ந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் காலை 8.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக பரிஸ் Necker மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. 
 
தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

மூலக்கதை