ஈரானின் செல்வாக்கை தடுக்க இஸ்ரேல்- ரஷ்யா பேச்சு

தினமலர்  தினமலர்

ஜெருசலேம்: ஈரானின் செல்வாக்கை தடுக்க, இஸ்ரேல் பிரதமர் நேதான்யாஹூ ரஷ்ய அதிபருடன் பேசவுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக சிரியாவில் நடந்து வரும் சண்டையில், ஈரானின் பங்களிப்பால் அப்பகுதியில் அந்நாடு செல்வாக்கு பெற்று வருவதாகவும், அந்நாடு தனது செல்வாக்கை ஹிஸ்புல்லா போன்ற குழுக்கள் மூலம் செலுத்தி வருவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இஸ்ரேலை எதிர்ப்பதில் ஈரான் முக்கியமான பங்காற்றி வருகிறது. சிரியாவில் அதிபர் ஆஸாத்தின் ஆட்சியை ஈரானும், ரஷ்யாவும் ஆதரித்து வருகின்றன.
௨ ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலும், ரஷ்யாவும் தவறுதலாக ஒருவர் மீது மற்றொருவர் தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரானின் செல்வாக்கை தடுக்க, இஸ்ரேல் பிரதமர் நேதான்யாஹூ, ரஷ்ய அதிபர் புடினுடன் அடுத்த வாரம் ரஷ்யாவின் சுற்றுலாத் தலமான சோசியில் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.

மூலக்கதை