பாட்ஷாஹேவிலிருந்து கத்ரினா, கரீனா நீக்கப்பட்டது ஏன்?

தினமலர்  தினமலர்
பாட்ஷாஹேவிலிருந்து கத்ரினா, கரீனா நீக்கப்பட்டது ஏன்?

பாட்ஷாஹோ படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் முன்னணி நடிகைகளான கத்ரினா கைப், கரீனா கபூர் கான் ஆகியோரிடம் பேசப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய படத்தின் டைரக்டர் மிலன் லுத்ரியா, இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என விளக்கினார்.

அப்போது அவர் கூறுகையில், இப்படத்திற்காக முதலில் கரீனா கபூரிடம் தான் பேசினோம். ஆனால் கொஞ்ச காலம் காத்திருக்கும்படி அவர் எங்களிடம் கூறினார். அதற்கு பிறகு திருமணம், குழந்தை பிறப்பு ஆகிய காரணங்களால் இப்படத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறி விட்டார். அதன் பிறகு கத்ரீனாவிடம் சென்றோம். நான் அவரிடம் கதையை சொன்னேன். கதை அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் எங்களின் சூட்டிங் நேரத்திற்கும் அவரது தேதிக்கும் ஒத்துவரவில்லை. அதனால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை.

கரீனா, கத்ரீனாவை தொடர்ந்து இலியானாவிடம் இந்த கதையை கூறினோம். அனைத்து ஒத்து வந்தது. அதனால் அவரை ஒப்பந்தம் செய்து, வேலையை ஆரம்பித்தோம். இப்போது படமும் தயாராக உள்ளது என்றார். வரும் செப்டம்பர் 1 ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில் அஜய் தேவ்கன், இலியானா, இஷா குப்தா, இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மூலக்கதை