கூடிய விரைவில் அணிகள் இணையும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
கூடிய விரைவில் அணிகள் இணையும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டிஉள்ளது. முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர், அதிமுகவின் இரு அணிகளும் நாளை இணையும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சங்கரன்கோவிலில் ஒண்டிவீரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பன்னீர்செல்வம் செய்தியார்களிடம் கூறியதாவது:

பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது, கூடிய விரைவில் அணிகள் இணையும். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் எந்த நிபந்தனைகளும் விதிக்கவில்லை. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, கூடிய விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.

மூலக்கதை