'ரோஜா' முதல் 'மெர்சல்' வரை - ஏ.ஆர்.ரஹ்மான் 25 #25YearsOfRahmanism
தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதலே இசைக்கும் அதற்குமான பந்தம் யாழும் நரம்பும் போலானது. ஒவ்வொரு காலகட்டங்களின் ரசனைகளுக்கும் ஏற்றாற்போல நமது தமிழ் சினிமாவிலும் இசையின் வடிவம் மாற்றமடைந்து கொண்டே வந்துள்ளது. தியாகராஜ பாகவதர் காலத்து சங்கீதத்தைத் தனது மெல்லிசையால் ஓவர்டேக் செய்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அதற்கடுத்த காலகட்டத்தில் இளையராஜாவின் ஆர்மோனியம் ரசிகர்களின் செவிகளில் இசைத்தேன் ஊற்றியது. ராஜாவின்