வாணியம்பாடி அருகே நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை

தினகரன்  தினகரன்

வாணியம்பாடி: வேலூர் மாவட்டத்தில் தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியான வாணியம்பாடி அடுத்த கூடுபள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில்  நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளனரா என மத்திய, மாநில உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் இருமாநில போலீசார் மற்றும் அதிரடிப்படையினர்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 30 பேர் ெகாண்ட குழுவினர் ேதடுதல் வேட்டையில் நேற்று மாலை 6.30 மணி முதல் ஈடுபட்டனர். அவ்வழியாக செல்லும், வாகனங்கள்  அனைத்தையும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வருகின்றனர். மேலும், சந்தேகத்துக்கிடமான நபர்களையும், ஆங்காங்கே ஆடு, மாடு  மேய்ப்பவர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை