ஸ்பெயின் தாக்குதலில் 30 பிரெஞ்சு குடிமக்கள் காயம்! - உத்தியோகபூர்வ தகவல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஸ்பெயின் தாக்குதலில் 30 பிரெஞ்சு குடிமக்கள் காயம்!  உத்தியோகபூர்வ தகவல்!!

வியாழக்கிழமை மாலை மற்றும் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டை பயங்கரவாத தாகுதலில் காயமடைந்த பிரெஞ்சு நபர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று நண்பகலுக்கு பின்னதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரட்டைத்தாக்குதலில் 26 பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த தகவகளை முன்னதாக தெரிவித்திருந்தோம்.  தற்போது Barcelona மற்றும் Cambrils ஆகிய இரு நகரங்களிலும் இடம்பெற்ற இரு தாக்குதலிலும் 30 பிரெஞ்சு குடிமக்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
தற்போது 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையவர்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 14 பேர்களில் ஐந்து நபர்கள் நிலமை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை