உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 23ஆக உயர்வு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உட்கல் பயணிகள் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. பூரியிலிருந்து ஹரித்துவார் வரை செல்லும் கலிங்கா உட்கல் ரயில் முசாபர் நகர் அருகே விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்க மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.