உத்தரப்பிரதேசத்தில் உட்கல் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் உட்கல் பயணிகள் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. பூரியிலிருந்து ஹரித்துவார் வரை செல்லும் கலிங்கா உட்கல் ரயில் முசாபர் நகர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்க மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.