ஸ்பெயின் தாக்குதல் - Grande Mosquée de Paris கண்டனம்!!
வியாழக்கிழமை மாலை மற்றும் நள்ளிரவில் இடம்பெற்ற ஸ்பெயினின் இரட்டைத்தாக்குதலுக்கு பரிசின் பெரிய பள்ளிவாசல் கண்டணம் தெரிவித்துள்ளது.
Grande Mosquée de Paris வெளியிட்ட அறிக்கையில், 'இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு Grande Mosquée de Paris தனது கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறது. வன்முறை எப்பொழுதும் சகிப்புத்தன்மையை இல்லாது செய்கிறது. தவிர அது ஒற்றுமையாக வாழ்வதற்குரிய நம்பிக்கையை இழக்கச் செய்கிறது!' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 'இதுபோன்ற மூர்க்கத்தனமான தாக்குதல் ஒற்றுமைக்காகவும், இனவாதத்துக்கு எதிராகவும் போராடுபவர்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது!' எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.