ஒன்றுபட்டு நின்றால் 2019ல் மத்தியில் ஆட்சி மாற்றம்: மம்தா பானர்ஜி

தினமலர்  தினமலர்
ஒன்றுபட்டு நின்றால் 2019ல் மத்தியில் ஆட்சி மாற்றம்: மம்தா பானர்ஜி

கோல்கட்டா: எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுபட்டு நின்றால், 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

பெருமை:


கோல்கட்டாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர்களை, ஒரே மேடையில் ஒருங்கிணைத்ததில், ஐக்கிய ஜனதா தள தலைவர், சரத் யாதவ் வெற்றி பெற்றுள்ளார்; இதற்காக அவரை பாராட்டுகிறேன். இதில், நாங்களும் இடம் பெற்றுள்ளோம் என்பதை, பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

ஒன்றுபட்டால் வெற்றி:


எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நின்றால், நம் வெற்றி நிச்சயம். 2019 லோக்சபா தேர்தலுக்கு பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். கூட்டணியிலிருந்து நிதிஷ் விலகியதை சிந்திக்காமல், 100 சரத் யாதவ், 100 லாலு மற்றும் 100 அகிலேஷ் ஆகியோர் குறித்தே எனது சிந்தனை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை