திரிபுரா முதல்வர் சர்காருக்கு கொலை மிரட்டல்

தினமலர்  தினமலர்
திரிபுரா முதல்வர் சர்காருக்கு கொலை மிரட்டல்

அகர்தலா: திரிபுரா முதல்வர், மாணிக் சர்காருக்கு, 'பேஸ்புக்' கில் கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை மிரட்டல்:


வடகிழக்கு மாநிலமான, திரிபுராவில், முதல்வர், மாணிக் சர்கார் தலைமையில், மார்க்.கம்யூ., ஆட்சி நடக்கிறது.'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், ஒரு பெண் புகைப்படத்துடன், ரியோ ராய் என்பவர், ஒரு தகவலை பதிவு செய்திருந்தார். அதில், 'உலக கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கவுன்சிலின் தீவிர உறுப்பினர் நான். திரிபுரா முதல்வர், மாணிக் சர்காரின் தலையை வெட்டுபவர்களுக்கு, 5.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன்' என, கூறியிருந்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விரைவில் கைது:


இது பற்றி,திரிபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், 'பேஸ்புக்'கில், அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.மேற்கு திரிபுரா மாவட்ட, எஸ்.பி., அபிஜித் சப்தரிஷி கூறுகையில், ''முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க, சைபர் குற்றப்பிரிவு நிபுணர்களின் உதவியை கேட்டுள்ளோம்; விரைவில் அந்த நபரை பிடித்துவிடுவோம்,'' என்றார்.

மூலக்கதை