சபரிமலையில் திடீர் தீ விபத்து

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம் : சபரிமலை  ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் காலை  ஆவணி மாத பூஜைகள்  தொடங்கியது. இதையொட்டி, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து ஐயப்பனை  தரிசித்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள்  ஆங்காங்கே கற்பூரம் ஏற்றி  வைப்பது வழக்கம். நேற்று காலை  8.30 மணியளவில் சில பக்தர்கள்  கோயில் வடக்குவாசல்  அருகே கற்பூரம்  ஏற்றினர். அப்போது  எதிர்பாராத விதமாக அருகில்  இருந்த பக்தர்களின் துணி மற்றும் பொருட்கள் மீது தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ  மளமளவென பரவியது.  சுதாரித்துக் கொண்ட  பக்தர்கள், தீயை மேலும்  பரவாமல் அணைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. வரும்  21ம் தேதி ஆவணி பூஜைகள் முடிந்து சபரிமலை  கோயில் நடை  அடைக்கப்படுகிறது.

மூலக்கதை