ஸ்பெயின் தாக்குதலில் காயமடைந்த பிரெஞ்சு மக்கள்! - விசாரணைகள் ஆரம்பித்தன!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஸ்பெயின் தாக்குதலில் காயமடைந்த பிரெஞ்சு மக்கள்!  விசாரணைகள் ஆரம்பித்தன!!

ஸ்பெயினில் இடம்பெற்ற இரட்டைத் தாக்குதலில் 26 பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வியாழக்கிழமை இரவு Barcelona நகரிலும், அன்றைய நள்ளிரவில் Cambrils பகுதியிலும் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 26 பிரெஞ்சு மக்கள் காயமடைந்ததாகவும், அதில் 11 பேரின் நிலை மிக கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தூதரகம் மற்றும் அமைச்சகம் இத்தகவலை உறுதி செய்துள்ளது. 
 
அதேவேளை தற்போது கிடைத்த செய்திகளின் படி பரிஸ் அரச வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட பிரெஞ்சு மக்கள் குறித்த தகவல்களும், விபரங்களும் சேகரிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும், சற்று முன் ஸ்பெயின் இரட்டைத்தாக்குதலின் போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும், மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை