மழை வெள்ளத்தால் ரயில்வேக்கு ரூ.150 கோடி இழப்பு

தினமலர்  தினமலர்
மழை வெள்ளத்தால் ரயில்வேக்கு ரூ.150 கோடி இழப்பு

புதுடில்லி: அசாம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், ரயில்வேக்கு, 150 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ரயில்வே செய்தித் தொடர்பாளர், அனில் சக்சேனா கூறியதாவது: அசாம், மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில், நாள் ஒன்றுக்கு, 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த மண்டலத்தில், 94 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய ரயில்வேயில், நாள் ஒன்றுக்கு, 5.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக, ஐந்து கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இந்த மண்டலத்தில், 56 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேத மதிப்புகள் தோராய கணக்குகளே; மீட்பு பணிகள் முடிந்த பின்பே, மொத்த இழப்பீடு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை