ஓசூரில் இன்று அதிகாலை பயங்கரம்: 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை: 5 பேர் போலீசில் சரண்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓசூரில் இன்று அதிகாலை பயங்கரம்: 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை: 5 பேர் போலீசில் சரண்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே தத்தாத்திரிபுரம் செம்பரசனஅள்ளி பிரிவு ரோட்டில் உள்ள குளத்தில் 2 வாலிபர்கள் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு இறந்த நிலையில் கிடந்தனர். இன்று காலையில் குளம் வழியாக சென்றவர்கள், வாலிபர்கள் கொலையாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவல் பரவி அப்பகுதி மக்கள் பெருமளவில் அங்கு திரண்டனர்.   இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பாகலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 5 ேபர் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள், செம்பரசனஅள்ளி குளத்தில் இருவரை வெட்டி கொலை செய்துள்ளோம் எனகூறி சரணடைந்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடலையும் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில், கொலையானது கொத்தூர் கிராமத்தை சேர்ந்த மஞ்சு என்ற பூகி (25), பரத் (25) என்பதும், ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.   நண்பர்களான இருவரும், அடிக்கடி கர்நாடக மாநிலத்திற்கு சென்று கொள்ளையடித்து வருவதும், பின்னர் அந்த பணத்தை கொண்டு உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
பாகலூர் போலீசார் சரணடைந்த 5 பேரிடமும் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும், கொடியாளத்தை சேர்ந்த சுரேஷ் (24), ஹரீஸ் (28) என்பவர்களை மஞ்சுவும், பரத்தும் கடத்திச்சென்று செம்பரசனஅள்ளி அருகே ஒரு கட்டிடத்தில் கட்டிப்போட்டு ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் எங்களிடம் பணம் இல்லை எனகூறி இருவரும் கெஞ்சியபோதும், அவர்கள் விடவில்லை.



உங்களுடைய நண்பர்களை வரவழையுங்கள் என கூறி இருக்கின்றனர். இதையடுத்து, கக்கனூரை சேர்ந்த முனிராஜ் (28), ஈத்தங்கரையை சேர்ந்த மதுசூதனன் (25), யஷ்வந்த் (28) ஆகிய 3 பேரையும் செல்போனில் தொடர்பு கொண்டு சுரேஷூம், ஹரீஸூம் வரவழைத்தனர்.

அவர்கள் மூவரையும் கட்டிப்போட்டு, 5 பேரும் சேர்ந்து நாங்கள் கேட்ட ரூ. 10 லட்சத்தை கொடுத்தால் தான் விடுவோம், இல்லை என்றால் கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர். அவர்கள் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது.

தொடர்ந்து, மது அருந்தலாம் வாருங்கள் என 5 பேரையும் அழைத்த மஞ்சும், பரத்தும், அவர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது, 5 பேரும் இவர்களை விட்டு வைத்தால் நம்மை கொன்று விடுவார்கள், அதனால், இருவரையும் கொலை செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.



மஞ்சுவும், பரத்தும் போதையில் இருந்த நிலையில், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும், ரியல் எஸ்டேட் அதிபர்கள் உட்பட 5 பேரும் சரமாரியாக ெவட்டி கொலை செய்து குளத்தில் வீசியுள்ளனர். அதன்பின், ஆயுதங்களுடன் போலீசில் வந்து சரணடைந்துள்ளனர்.

கொலைக்கு இது மட்டும் தான் காரணமா அல்லது அவர்களிடையே முன்விரோதம் ஏதேனும் உள்ளதா? என விசாரித்து வருகிறோம் என்றனர்.

.

மூலக்கதை