நடிகர்களுக்கு போதை மருந்து சப்ளை? கைதான 2 பேரிடம் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகர்களுக்கு போதை மருந்து சப்ளை? கைதான 2 பேரிடம் விசாரணை

வேலூர்: தெலங்கானாவில் போதை மருந்து விவகாரம் தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேருக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஐதராபாத் போலீசார் கஞ்சா விற்பனை செய்ததாக, வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த தாமோதரன் என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் தொடர்புடைய விருதம்பட்டு மற்றும் அரப்பாக்கத்தை சேர்ந்த 2 பேரின் விவரங்களை கூறியுள்ளார். அதன்பேரில், ஐதராபாத் போலீசார் கடந்த சில நாட்களாக கைது வாரண்ட்டுடன் வேலூரில் முகாமிட்டிருந்தனர்.



அவர்கள் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 2 பேரை நேற்று கைது செய்தனர்.

மேலும் இவர்களுக்கு தெலங்கானாவில் நடிகர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த விவகாரத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

.

மூலக்கதை