ஜெயசூர்யா பேட்டி ஒரு நாள் தொடரில் மேத்யூஸ் பந்து வீசுவார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெயசூர்யா பேட்டி ஒரு நாள் தொடரில் மேத்யூஸ் பந்து வீசுவார்

தம்புலா: இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும்,ஆல்ரவுண்டருமான ஏஞ்சலோ மேத்யூஸ் அண்மை காலமாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டில் காயத்தால் பெரும்பாலான தொடர்களில் அவர் விளையாட வில்லை.

தொடை பகுதியில் ஏற்பட்டகாயத்தால் 5 மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த ஜூனில் அணிக்குதிரும்பிய மேத்யூஸ் மினி உலக கோப்பையில் பந்து வீசாமல் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட்டார். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேத்யூஸ் பந்து வீசுவார் என தேர்வுக்குழுத்தலைவர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.



மேத்யூசால் மீண்டும் பந்து வீச முடியும் என்பது எங்களுக்கு மிகப்பெரிய நிம்மதி. நாங்கள் கவனமாக அவரை நிர்வகிக்க வேண்டும்.

அவர் பத்து ஓவர்கள் முழுமையாக பந்து வீச தயாராக இல்லை, ஆனால் அவர் நிச்சயமாக ஐந்து முதல் ஆறு ஓவர்கள் பந்து வீச முடியும். இது எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ், என ஜெயசூர்யா கூறி உள்ளார்.


.

மூலக்கதை