அரசியல் பேசி பேசி காமெடி நடிகராகி விட்டார் கமல்: அமைச்சர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசியல் பேசி பேசி காமெடி நடிகராகி விட்டார் கமல்: அமைச்சர் பேட்டி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ  சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது  தினகரனின் கோரிக்கையை ஏற்று அல்ல.

அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்றுதான் முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதிமுகவில் இரு அணிகளும் இணைப்பு குறித்து வெகு விரைவில் நல்ல தகவல் வெளியாகும்.

கமல் சிறந்த நடிகர் தான். அரசியல் பற்றி அவருக்கு தெரியாது.

அரசியல் பேசி, பேசி அவர் காெமடி நடிகராகி விட்டார் என்றார்.

.

மூலக்கதை