பீகாரில் வெள்ளம் 15 மாவட்ட மக்கள் பாதிப்பு பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு

PARIS TAMIL  PARIS TAMIL
பீகாரில் வெள்ளம் 15 மாவட்ட மக்கள் பாதிப்பு பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு

 பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையில்  அங்கு பல்வேறு மாவட்டங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தால்  119 பேர் உயிரிழந்துள்ளனர். 15 மாவட்டங்களில் 93 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

குறித்த வீடியோவில், பீகார் வெள்ளப்பெருக்கில் சாலை அடித்து செல்லப்பட்ட நிலையில், பல மக்கள் உடைந்த சாலையில் மேல் கடந்து செல்கின்றனர்.

அப்போது, தாய் தனது மகள் மற்றொரு ஆணுடன் கடந்த செல்லும் போது சாலை உடைந்து தாயும், சிறிய மகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்கின்றனர்.

உடன் வந்த ஆண் அதிர்ஷ்டவசமாக சாலையின் மறுபக்கம் விழுந்து உயிர் தப்பிக்கிறார். அங்கிருந்த மக்கள் இரண்டு உயிர்களையும் காப்பாற்ற முடியாமல் நின்று வேடிக்கை பார்கின்றனர்.

சம்பவ இடத்திலிருந்த ஒருவர் தனது போனில் பதிவு செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

மூலக்கதை