இறுதிச்சடங்கில் தப்பியோடிய சிறைக்கைதி! - ஜோந்தாமினர்கள் தேடுதல் வேட்டை!!

PARIS TAMIL  PARIS TAMIL
இறுதிச்சடங்கில் தப்பியோடிய சிறைக்கைதி!  ஜோந்தாமினர்கள் தேடுதல் வேட்டை!!

சிறைக்கைதி ஒருவர் இறுதிச்சடங்கை பயன்படுத்தி தப்பிடியோடியுள்ளார். காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 
 
Puy-de-Dôme மாவட்டத்தின் Auzat-la-Combelle பகுதியில் இச்சம்பவம் நேற்று  புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த 35 வயதுடைய கைது, இதற்கு முன்னதாக 8 தடவைகள் சிறு சிறு திருட்டு குற்றங்கள், சண்டைகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டிந்தார். இந்நிலையில்  Riom சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதி, தனது காதலியின் தாத்தா இறந்துவிட்டதாகவும், முறைப்படியான அனுமதியுடன் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பாதுக்காப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
 
ஆனால் எதிர்பாராத வேளையில், ஆபத்தான தூள் ஒன்றை காவல்துறையினர் மீது வீசிவிட்டு கைதி தப்பிச்சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து மிக பரபரப்பாக குற்றவாளியை தேடும் பணி ஆரம்பித்தது. 40 ஜோந்தாமினர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.  ஒரு உலங்குவானூர்தியும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. அப்பகுதி ஜோந்தாமினர்கள் இந்த வழக்கை விசாரணைகளுக்கு எடுத்துள்ளனர்.

மூலக்கதை