ஷார்ஜாவில் நடந்த விபத்தில் கேரள பெண் அரசியல்வாதி பலி: அழகு நிலைய உரிமையாளர் கைது

தினகரன்  தினகரன்

துபாய் : ஷார்ஜாவில் ஓடும் காரிலிருந்து தவறி விழுந்து கேரளாவை சேர்ந்த 40 வயது பெண் அரசியல்வாதி உயிரிழந்தார். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா பிரசாந்த், ஷார்ஜாவில் கடந்த 5 வருடங்களாக அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வந்துள்ளார். காசர்கோட்டில் பாஜ கவுன்சிலராக இருந்த சுனிதா, கடந்த 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உடுமா தொகுதியில் வேட்பாளராக நின்றுள்ளார்.இந்நிலையில், ஷார்ஜாவில் அழகு நிலையத்தின் உரிமையாளர் உள்பட அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் காரில் வெளியே சென்றுள்ளனர். உரிமையாளர் காரை ஓட்டியுள்ளார். வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்ததால், கதவு திறந்து சுனிதா தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அங்கிருந்த விளக்கு கம்பத்தில் பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவத்தில் காரில் பயணம் செய்த மற்ற ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காரை ஓட்டிய அழகு நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூலக்கதை