சிறையில் கலவரம்: 37 பேர் பலி

தினமலர்  தினமலர்

கராகாஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், அமேசானா மாகாணத்தில் உள்ள சிறையில், 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரு குழுவினரிடையே, மோதல் நடந்து வந்தது. இந்நிலையில், சிறை கைதிகள், நேற்று முன்தினம் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். போலீசார் தலையிட்டு, கலவரத்தில் ஈடுபட்டோரை தடுக்க முயன்றனர்; இதில், 17 காவலர்கள் காயமடைந்தனர். கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், 37 பேர் உயிரிழந்தனர். இதன்பின், கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு, கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

மூலக்கதை