பர்சிலோனா பயங்கரவாதத் தாக்குதல் - 13 பேர் பலி 6 பிரான்சில் அவசர அழைப்பு மையங்கள் (காணொளி)

PARIS TAMIL  PARIS TAMIL
பர்சிலோனா பயங்கரவாதத் தாக்குதல்  13 பேர் பலி 6 பிரான்சில் அவசர அழைப்பு மையங்கள் (காணொளி)

சற்று முன்னர் ஸ்பெயினில் உள்ள பர்சிலோனாவில், பயங்கரவாதத் தாககுதல் ஒன்று நடந்துள்ளது. சிறு பார ஊர்தியொன்றினால் (camionnette), பயங்கரவாதி மக்களை மோதித் தாக்குதல் நடாத்தியுள்ளான். 
 
இதில் 13 பேர் பலியாக, 55பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பத்துப்பேர் உயிராபத்தான நிலையில் உள்ளனர். உறவுகள் பற்றிய செய்திகளை அறிய பரிசிலுள்ள ஸ்பெயின் தூதரகம் உடனடி அவசர இலக்கம் ஒன்றை வழங்கி உள்ளது. 
 
 
அதே நேரம் பிரான்சின் உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவையும் அவசர இலக்ககங்களை வழங்கி உள்ளன.
 
பிரான்சில் உள்ள இடர்களைவு நடவடிக்கையினர், உள்துறை மற்றும் வெளியுறவுத் துறையின் ஊடாகப் பொது இலக்கம் ஒன்றையும் வழங்கி உள்ளனர். 01.43.17.51.00 என்ற இலக்கத்தின் மூலம் பர்சிலோனாவில் உள்ள தங்களின் உறவுகளின் நிலைமையினை அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை