பயங்கரவாதம்! - இளம்பெண்ணுக்கு 3 வருட சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பயங்கரவாதம்!  இளம்பெண்ணுக்கு 3 வருட சிறை!!

பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு, இளம் பெண் ஒருவருக்கு மூன்றுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
நேற்று புதன்கிழமை Montpellier உச்சநீதிமன்றில் இந்த தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய குறித்த பெண் அழகிப்போட்டிகளில் கலந்துகொள்பவர் எனவும், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத்தை தூண்டும் விதமாகவும், ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தவிர இஸ்லாமிய பயங்கரவாத்துக்கு ஆதரவாக சில குரல்கள் மற்றும் பாடல்களையும் ஒலிப்பதிவு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் குறித்த இளம் எண், 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளதாகவும், செய்த தவறுகளுக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை