நடுவரை தள்ளி விட்ட விவகாரம்: கிறிஸ்டியானா ரொனால்டோ மேல்முறையீடு நிராகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடுவரை தள்ளி விட்ட விவகாரம்: கிறிஸ்டியானா ரொனால்டோ மேல்முறையீடு நிராகரிப்பு

மாட்ரிட்: போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானா ரொனால்டோ ரியல் மாட்ரிட் கிளப்புக்காகவும் விளையாடி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை முதல் லெக் போட்டியில், பார்சிலோனா-ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.

இதில், 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின்போது, விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதால், கிறிஸ்டியானா ரொனால்டோ சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.



அப்போது நடுவரை பிடித்து தள்ள முயன்றதால், 5 போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. கிறிஸ்டியானா ரொனால்டோ மீதான தடையை எதிர்த்து ரியல் மாட்ரிட் கிளப் மேல்முறையீடு செய்தது.

ஆனால் மேல்முறையீட்டை நிராகரித்த ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு, கிறிஸ்டியானா ரொனால்டோ மீதான 5 போட்டிகள் தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.


.

மூலக்கதை