உறியடி திருவிழாவில் 2 பேர் பலி; 117 பேர் காயம்

தினமலர்  தினமலர்
உறியடி திருவிழாவில் 2 பேர் பலி; 117 பேர் காயம்

மும்பை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிராவில் நடந்த, 'தஹி ஹண்டி' எனப்படும், உறியடி நிகழ்ச்சிகளில், இருவர் இறந்தனர்; 117 பேர் காயம் அடைந்தனர்.

உறியடி:


மஹாராஷ்டிராவில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடக்கும், தயிர் பானை உடைக்கும் உறியடி நிகழ்ச்சி, மிகவும் பிரபலம். கிருஷ்ண ஜெயந்தி விழா, சமீபத்தில், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவின் பல இடங்களில், நேற்று, உறியடி நிகழ்ச்சி நடந்தது. மனித கோபுரங்கள் அமைத்து, தயிர் பானைகள் உடைக்கப்பட்டன.

இருவர் பலி:


பல்ஹார் மாவட்டத்தில், உறியடி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர், மேலிருந்து கீழே விழுந்தார். நவி மும்பை மாவட்டத்திலும், ஒருவர் இறந்தார். மும்பையின் பல்வேறு இடங்களில் நடந்த உறியடி நிகழ்ச்சியில், 117க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

அரசு அதிகாரிகள் கூறுகையில், 'உறியடி நிகழ்ச்சியில் ஈடுபட்ட போது, இவர்கள் இறந்ததாக கூறுவது தவறு; ஒருவர், காக்கா வலிப்பு நோயாலும், மற்றவர், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்தனர்' என்றனர்.

மூலக்கதை