பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட 95 வயது நபர் கைது!!
சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு 95 வயதுடைய முதியவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
10 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருத்தியின் பெற்றோர்களால் பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்தே குறித்த முதியவர் திங்கட்காமை கிழக்கு லியோனின் Bourgoin-Jallieu நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இரண்டு சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கியுள்ளார். காவல்துறையினர் குறித்த முதியவரை கைதுசெய்து விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றார்.
விசாரணைகளில் அப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்களோடு ஒற்றுமையாக வசித்த மேற்படி முதியவர், சிறுமிகளுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கி பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதுவரை இரண்டு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.