மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஸ்ரீசாந்த்!

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஸ்ரீசாந்த்!

கொச்சி: 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு, ஆயுட்கால தடை விதித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டது. இந்த தடையை பிசிசிஐ நீக்க வேண்டும் என கேரள ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்திய அணிக்கு மீண்டும் விளையாட விரும்புவதாக ஸ்ரீசாந்த்தும் அப்போது கூறினார். ஆனால் கேரள ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதனிடையே கொச்சியில் நேற்று நடந்த, மலையாள சினிமா துறையினருடனான காட்சி போட்டி ஒன்றில் ஸ்ரீசாந்த் பங்கேற்றார்.

பிசிசிஐ தடை விதித்திருந்தாலும் கூட, ஸ்ரீசாந்தின் சொந்த மாநிலமான கேரளாவில் அவருக்கு ஆதரவான நிலைப்பாடே காணப்படுகிறது. காட்சி போட்டியின்போதும் கணிசமான ரசிகர்கள் ஸ்ரீசாந்தை உற்சாகப்படுத்தினர்.

ஸ்ரீ சாந்த் களத்திற்குள் வந்தபோது, அவருடன் விளையாடிய வீரர்கள் அவருக்கு ரோஜாக்களை வழங்கினர்.


.

மூலக்கதை