20 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற படகு - ஆற்றில் கவிழ்ந்தது!!

PARIS TAMIL  PARIS TAMIL
20 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற படகு  ஆற்றில் கவிழ்ந்தது!!

20 சுற்றுலாப்பயணிகளுடன் Charente ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஜோந்தாமினர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலைக்கு சற்று முன்னதாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 2 வயது சிறுவன் மற்றும் 80 வயது முதியவர் ஒருவருடன் சேர்த்து மொத்தம் 20  சுற்றுலாப்பயணிகளுடன் படகு கவிழ்ந்துள்ளது. சிறிய ரக துடுப்பு படகு எடை தாங்காமல் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர், முதலுதவி படையினர் குவிக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர். பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிக்கப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
சம்பவ இடத்தில் 60 மீட்புப்படையினர் குவிக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஜோந்தாமினர்கள் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மூலக்கதை