மக்ரோனை பின்தொடரும் புகைப்படக்காரர்கள்! - வழக்கு பதிவு!!
ஜனாதிபதியினை இரகசியமாக பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வரும் புகைப்படக்கலைஞர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுள்ளது.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற நூறு நாட்கள் ஆன நிலையில் இம்மானுவல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி முதன்முறையாக விடுமுறைக்காக மார்செய் நகருக்குச் சென்றுள்ளனர். முதலில் இந்த தகவல் ரகசியாக இருந்தது. ஆனால் பின்னர் மார்செய் நகரில் விடுமுறையைக் கழிப்பதாக தெரிவிக்கப்பட்டு பல புகைப்படங்களும் வெளியானது. மக்ரோன் வெளியில் செல்லும் அனைத்து நேரங்களில் எல்லாம் புகைப்படக்கலைஞர் ஒருவர் தவறாமல் பின் தொடர்வதாகவும், உந்துருளி போன்ற வாகங்களில் பின்னால் சென்று புகைப்படங்கள் எடுப்பதாகவும், ஒருதடவை எச்சரிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
அதைத் தொடர்ந்து குறித்த ஒரு புகைப்படக்கலைஞர் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மானுவல் மக்ரோன் இந்த புகாரை அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, குறித்த புகைக்கப்படக்கலைஞர் உடனடியாக கைதுசெய்யப்பட்டு 6 மணிநேரங்களுக்கு மேலாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.