Seine et Marne - பீட்சா கடைக்குள் நுழைந்த மகிழுந்து! - பயங்கரவாத தாக்குதலில் சிறுமி பலி! - 12 பேர் காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Seine et Marne  பீட்சா கடைக்குள் நுழைந்த மகிழுந்து!  பயங்கரவாத தாக்குதலில் சிறுமி பலி!  12 பேர் காயம்!!

கிழக்கு பரிசின் Seine et Marne இல் உள்ள Sept-Sorts எனும் சிறிய கிராமத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 12 பேர்வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இங்குள்ள pizzeria (பீட்சா கடை) ஒன்றுக்குள் BMW மகிழுந்து ஒன்று வேகமாக கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு நுழைந்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். தவிர 12 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரின் தோற்றத்தில் அவர் ஒரு பயங்கரவாதி என அறியமுடியவில்லை என அப்பகுதியில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளர். பயங்கரவாதி உடனடியாக கைதுசெய்யப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார். 
 
அதேவேளை மகிழுந்தை சோதனையிட்டதில், எவ்வித துப்பாக்கிகளோ... வெடிப்பொருட்களோ உள்ளே இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் 1985 ஆம் ஆண்டு Ferté-sous-Jouarre இல் பிறந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தற்போது கிடைத்த செய்திகளின் படி காயமடைந்த 12 பேர்களில் மற்றுமொரு சிறுமி உயிருக்குப்போராடி வருகிறார் எனவும் நிலமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை