மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விலகல்!

PARIS TAMIL  PARIS TAMIL
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விலகல்!

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை வீரர் ரங்கன ஹேரத் விலகியுள்ளார்.
 
இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
 
முதல் போட்டியில் காயம் காரணமாக குணரத்னே விலகியதை தொடர்ந்து, இரண்டாவது டெஸ்டிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விலகினார்.
 
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து முன்னணி பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் விலகியுள்ளார்.
 
முதுகுவலியின் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார், இதேபோன்று விதிமுறைகளை மீறியதாக இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை