தோனி ரசிகரை சீண்டிய ஜயவர்தன

PARIS TAMIL  PARIS TAMIL
தோனி ரசிகரை சீண்டிய ஜயவர்தன

முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் ரசிகர் ஒருவரை முன்னாள் இலங்கை கேப்டன் ஜயவர்தன சீண்டியுள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டன் தோனி. தன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாக, தனது கேப்டன் பொறுப்பை தூக்கி வீசினார். இந்நிலையில் தோனியின் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்த பதிவிற்கு ஜயவர்தன நக்கலாக பதில் அளித்திருந்தார்.
 
உலகின் மின்னல் மனிதன் என கருதப்பட்ட ஜமைக்காவின் உசைன் போல்ட், சமீபத்தில் தனது தடகள வாழ்க்கைக்கு விடைகொடுத்தார். ஆனால் தனது கடைசி போட்டியில் மூன்றாவது இடம் பிடித்தார். இதனால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, முன்னாள் இலங்கை கேப்டன் ஜயவர்தன, வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,’ ரெஸ்பெக்ட்’ உசைன் போல்ட்.’ என குறிப்பிட்டிருந்தார்.
 
 
 
இதற்கு தோனி ரசிகர் ஒருவர் அளித்துள்ள பதிலில்,’உசைன் போல்ட்டை விட வேகமான மனிதரான தோனிக்கு மரியாதை கொடுங்கள்.’ என குறிப்பிட்டிருந்தார்.
 
 
 
இந்த பதிவிற்கு அளித்துள்ள ஜயவர்தன,’ஏன் தோனி தனது பைக்கில் சென்றாரா?’ என குறிப்பிட்டிருந்தார். 
 

மூலக்கதை