விளையாட்டு போட்டி விண்ணப்பிக்க ஆக. 9 கடைசி

தமிழ் முரசு  தமிழ் முரசு
விளையாட்டு போட்டி விண்ணப்பிக்க ஆக. 9 கடைசி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டு போட்டி ஆக. 10ம்தேதி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், பேட்மின்டன், வாலிபால், பேஸ்கட் பால் ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.

தடகள போட்டிகளில் 100மீ, 400 மீ, 800மீ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளும், நீச்சல் போட்டிகளில் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, பிரீஸ்டைல் 50 மீ, பேக் ஸ்ட்ரோக் 50 மீ, பிரெஸ்ட் ஸ்ட்ரோக் 50 மீ, பட்டர்பிளை ஸ்ட்ரோக் ஆகிய பிரிவுகளும் அடங்கும்.

மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களது நுழைவு விண்ணப்பத்தை ஆக. 9ம் தேதிக்குள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ரயில்வேரோடு, காஞ்சிபுரம் என்ற முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

.

மூலக்கதை