இறுதி முடிவை வெளியிட்ட இலங்கை அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
இறுதி முடிவை வெளியிட்ட இலங்கை அணி!

இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையில் இடம்பெறவுள்ள 2 வது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விளையாடவுள்ளது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
முதலாவது, டெஸ்ட் போட்டியின் போது, ரங்கன ஹேரத்தின் விரல் பகுதியினை பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டது.
 
இந்நிலையில்,உடல் தகுதி சோதனைக்கு பின்னர் அவர் 2 வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் மேலாளர் அசங்க குருசிங்க இச்செய்தியை உறுதி செய்துள்ளார்.
 
நாளை கொழும்பு மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்திய அணியுடனான 2 வது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார்.

மூலக்கதை