இலங்கை அணியிலிருந்து சுரங்க லக்மால் வெளியேற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை அணியிலிருந்து சுரங்க லக்மால் வெளியேற்றம்!

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
 
இந்திய-இலங்கை மோதும் 2வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3ம் திகதி கொழும்பு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் வெளியேற்றப்பட்டுள்ளார். முதுகு தசைப்பிடிப்புகள் காரணமாக லக்மால் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
அதேசமயம், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை புதிய அணித்தலைவர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தான் எதிர்பார்ப்பதாக ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை